June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே மின்கம்பத்தில் ஆட்டோ மோதி முதியவர் பலி

1 min read

An old man was killed when an auto hit an electric pole near Kadayam

15.7.2023
தென்காசி மாவட்டம்,கடையம் அருகே மின்கம்பத்தில் ஆட்டோ மோதியதில் ஆட்டோவில் பயணித்த முதியவர் பலியானார்.

விபத்து

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசகம் (வயது 70). இவர் தனது மனைவி பத்தி (வயது 62). உறவினர்கள் அருமைநாயகம் மனைவி பரிபூரணம் (வயது 62), ஆசிர்வாதம் மனைவி மகேஸ்வரி (வயது 47), தங்கராஜ் மனைவி அரசிளம்குமரி (வயது 43) ஆகியோருடன் கடையம் அருகே புலவனூரில் உள்ள துக்க வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் குருவன்கோட்டைக்கு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை வெங்கடேஷ் என்பவர் ஓட்டினார்.

அப்போது ஆட்டோ கடையம் கேளையாபிள்ளையூர் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாசகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.