June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் திறன் விழிப்புணர்வு கட்டுரை போட்டி- ஆட்சியர் பரிசு

1 min read

Skill Awareness Essay Competition in Tenkasi-District Collector Prize

18.7.2023
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவியர்களுக்கு திறன் விழிப்புணர்வு குறித்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கினார்.

தமிழக அரசால் ஆண்டுதோறும் ஜூலை இரண்டாவது வாரம் தொழில் விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2023 ஆண்டிற்கான தொழில்நெறி விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் வாரம் 11.07.2023 முதல் 15.07.2023 வரை தென்காசி மாவட்ட அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவியர்களுக்கு திறன் விழிப்புணர்வு குறித்த கட்டுரைப் போட்டி தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச் சந்திரன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் வெ.வீரவேல் மற்றும் கா.தங்கவேல், மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சிபிசக்கரவர்த்தி மற்றும் திறன் விழிப்புணர்வு குறித்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.