அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மர்மச்சாவு-கடற்கரையில் உடல் மீட்பு
1 min read
Govt School Headmaster Marmachau- Body recovered on the beach
19.7.2023
அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் உடல் ஒன்று மர்மமான முறையில் இறந்த நிலையில் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் கடலில் வீசப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை ஆசிரியர்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்த்தில் வசித்து வருபவர், பழனியப்பன்(வயது52), இவர் கூவத்தூர் அடுத்த கீழார்கொள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மங்கையர்கரசி, இவரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார்.
பழனியப்பன் வழக்கம்போல் கீழார் கொள்ளை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அவர் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை செங்கல்பட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பிறகு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
காயத்துடன் பிணம்
இந்நிலையில் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் உடலில் துணிகள் இல்லாமல் நிர்வாண கோலத்தில், உடலில் காயங்களுடன் ஒருவரது உடல் கரை ஒதுங்கி காணப்பட்டது. பிறகு சதுரங்கப்பட்டினம் போலீசார் பழனியப்பன் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தவுடன் நேரில் வந்து பார்த்து அவர்கள் உடலை பார்த்து அடையாளம் தெரிவித்ததை அடுத்து மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்கி காணப்பட்ட உடல் காணாமல் போன தலைமை ஆசிரியர் பழனியப்பன்தான் என உறுதி செய்யப்பட்டு, பிறகு பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணை
வீட்டிலிருந்து செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், எப்படி சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் காணப்பட்டார், என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவரது மனைவி மங்கையர்கரசி செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சதுரங்கப்பட்டினம் போலீசில் அளித்துள்ள புகாரில், எங்களது குடும்பத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இரு மகள்களுடன் நாங்கள் மகிழச்சியுடன் வாழ்ந்து வருகிறோம் என்றும், தனது கணவர் தலைமை ஆசிரியராக வேலை செய்த இடத்தில் முன்விரோதம் காரணமாக யாராவது, அவரை கொலை செய்து கடலில் உடலை வீசினார்களா? என சந்தேகமாக உள்ளது எனவும் இதுகுறித்து புலன் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதையடுத்து சதுரங்கப்பட்டினம் போலீசார் தலைமை ஆசிரியர் பழனியப்பன் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் சதுரங்கப்பட்டினம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.