June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடியில் பணியின் போது தவறி விழுந்து கணவர் பலி -மனைவி தற்கொலை.

1 min read

Husband dies after tripping while working in Paramakkudi – wife commits suicide

19.7.2023
பரமக்குடி நேரு நகரைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரது மகன் கற்பூரம் என்ற சுதாகரன்(36). இவரது மனைவி தாரணி காமாட்சி (29).இத் தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.பற்றவைப்பு மற்றும் எலக்ட்ரீசன் பணிபுரிந்து வரும் சுதாகரன் மற்றும் அவரது உறவினர் செந்தில்குமாரும் நேற்று முன்தினம் பிற்பகல் பரமக்குடி சத்தியமூர்த்தி தெருவில் வேணுகோபால் என்பவரது வீட்டின் முன்பகுதியின் மேலே கொசுவலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அதுசமயம் சுதாகரன் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்ததில் அவரது பின்தலையில் பலத்த அடிபட்டு ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுதாரகரன் பரிதாபமாக இறந்தார்.

கணவர் இறந்த தகவல் அறிந்த தாரணி காமாட்சி மிகவும் மனவேதனை அடைந்தார்.இதனால் மமனமுடைந்த அவர் அன்று இரவு தனது வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து இறந்த தாரணி காமாட்சியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கணவர் இறந்த சில மணி நேரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டது பரமக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.