ஆலங்குளம் பேரூராட்சியில் ரூ 85 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை பணிகள்
1 min read
Tenkasi Job Camp – Official Information
19.7.2023
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் ரூபாய் 85 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்.
சாலை அமைக்கும் பணி
ஆலங்குளம் பேரூராட்சி பகுதி 11 வது வார்டு, 12 வது வார்டு, 14 வது வார்டு, பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 85 லட்சம் செலவில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜான் ரவி, ஆலங்குளம் நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் நெல்சன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன்ராஜா, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலங்குளம் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர்
பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் மோகன்லால், அருணாசலம், ராஜதுரை, திமுக மாவட்ட பிரதிநிதி அன்பழகன், மருதும்புத்தூர் கூட்டுறவு சங்கத் தலைவர் மாரியப்பன், ஒன்றிய பிரதிநிதி ஆதி விநாயகம், தொழிலதிபர் மணிகண்டன், கிளைச் செயலாளர் அல்போன்ஸ், மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி, உட்பட திமுக நிர்வாகிகள் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.