June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கேளராவில் தெருநாய்க்கு ரேபிஸ்- கடந்த 6 மாதத்தில் 1,67,437 பேரை கடித்ததால் பரபரப்பு

1 min read

Stray dog rabies in Kelara – 1,67,437 bites in last 6 months

20.7.2023
திருவனந்தபுரத்தில் குழந்தைகளை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் அச்சம் கொண்டுள்ளனர்.

தெருநாய்கள்

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகும் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தினமும் ஏராளமானோர் தெருநாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் பேர் வரை தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும், கடந்த 6 மாதங்களில் 1,67,437பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரேபிஸ் தொற்று

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் குழந்தைகளை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நாயால் பாதிக்கப்பட்டவர்கள் ரேபிஸ் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதனால் நாய் கடியால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.