மணிப்பூர் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது- பிரதமர் மோடி கடும் கண்டனம்
1 min read
What happened to the daughters of Manipur is unforgivable – PM Modi strongly condemned
20/7/2023
மணிப்பூர் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது என்று பிரதமர் மோடி கூறினார்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடர்கிறது. அங்கு இரண்டு பழங்குடியின் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ஒரு கும்பலால் இழுத்து செல்லப்படும் வீடியோ வெளியானது. இந்த வீடியோ கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடரில் இது பிரதிபலித்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:-
குற்றவாளி யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும். மணிப்பூர் மகளுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது. என இதயம் கோபம் மற்றும் வலியால் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மாநில சட்டம்-ஒழுங்கு, குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த மாநில முதல்வர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.