பாலருவி ரயில் பாவூர்சத்திரத்தில் நின்று செல்ல அனுமதி- நள்ளிரவு உற்சாக வரவேற்பு
1 min read
Balaruvi train is allowed to stop at Bhavoorchatra – midnight welcome
21.7.2023
பாலருவி விரைவு ரயில் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில் நேற்று நள்ளிரவில் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் தென்காசி, செங்கோட்டை, வழியாக செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே நின்று சென்றது. இந்நிலையில் சமீப காலமாக பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்று செல்லாமல் இயக்கப்பட்டு வந்தது.
இதனால் கேரளாவிற்கு பணி நிமித்தமாகவும் வியாபாரம் நிமித்தமாகவும் செல்லும் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மீண்டும் நின்று செல்ல வேண்டும் என தென்காசி மாவட்ட எம்எல்ஏக்கள், எம்பிக்கள், வணிகர்கள் சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் பாவூர்சத்திரம் பகுதி ரெயில் பயணிகள் சார்பில் தெற்கு ரயில்வே மேலாளரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கினார்கள்.
இந்நிலையில் மீண்டும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் பயணிகள் மற்றும் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெயில் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தெட்சண மாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன்,
மதிமுக மாநில துணைப் பொது செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன், தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா,
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் இராம. உதயசூரியன், தென்காசி மாவட்ட மதிமுக அவைதலைவர் தென்காசி என்.வெங்கடேஸ்வரன் பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்கத் தலைவர் ஏ.பி. பாலசுப்பிரமணியன் செயலாளர் விஜய்சிங்கராஜ் பொருளாளர் ஆரோக்கியராஜ்,மாவட்ட கவுன்சிலர் எஸ். ஆர்.சுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவர் கே பி.குமார் பாண்டியன்
லயன்ஸ் கிளப் கே.ஆர்.பி.இளங்கோ, லட்சுமி சேகர், பரமசிவன், தளிர் தங்கராஜ் மற்றும் வியாபாரிகள் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்