மத்தளம்பாறை ஸோகோ நிறுவனத்தில் தீ தடுப்பு மாதிரி ஒத்திகை
1 min read
Fire Prevention Model Rehearsal at Mattalambara SOCO Company
21.7.2023
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியில் உள்ள ஸோகோ அலுவலகத்தில் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர்கள் நடத்திய தீ தடுப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கணேசன் உத்தரவின் பேரில் தென்காசி உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தலை மையில் மத்தளம்பாறை பகுதியில் உள்ள ஸோகோ நிறுவனத்தில் தீ தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
அப்போது தீ விபத்து மற்றும் வெள்ள அபாய காலங்களில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் தீ விபத்து மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றில் சிக்கியுள்ள பிறரை எவ்வாறு காப்பாற்றுவது அவர்களுக்கு முதல் உதவி எவ்வாறு அழிக்கப்பட வேண்டும். உயர் மாடி கட்டிடங்கள் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது தனி நபராக ஒருவரை மீட்பது தீ விபத்து காலங்களில் தீ விபத்துக்களை எளிதில் கையாளுவது போன்ற பயிற்சிகள் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு. ஸோகோ நிறுவன பொறுப்பாளர் பிரசன்னா தலைமை வகித்தார்.
தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை
சிறப்பு நிலை அலுவலர் கணேசன், சிறப்பு நிலை அலுவலர் போக்குவரத்து ஜெயபிரகாஷ் பாபு மாதவன் வெள்ளை பாண்டி, கார்த்திகேயன், ஆறுமுகம், சுந்தர், ஹனிபா, ஆகியோர் கலந்து கொண்டு தீ மற்றும் மழை வெள்ளம் ஏற்படும் நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை பல்வேறு முறைகளில் செய்து காட்டினார்கள்.
இந்த தீ தடுப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை
மத்தளம்பாறை ஸோகோ நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 300 பணியாளர்கள் பார்வையிட்டு பயன் பெற்றனர். மேலும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் மூலம் தீ விபத்து மழை வெள்ளம் போன்ற காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்த தென்காசி தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு ஸோகோ நிறுவன பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.