கடையம் பத்திரகாளிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் பற்றி ஆலோசனைக்கூட்டம்
1 min read
Consultation meeting about Kumbabishekam at Kadayam Pathirakali Amman temple
23-7-2023
கடையம் பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருப்பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.
பத்திரகாளி அம்மன் கோவில்
தென்காசி மாவட்டம் கடையம் பத்திரகாளி அம்மன்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தை மாதம் எட்டு நாட்கள் கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இதன் மூலக் கோவில் ஊருக்கு மேற்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் நித்திய கல்யாணி அம்மன் கோவிலுக்கு கீழ்புறம் வடபத்து குளக்கரையில் வடக்கு நோக்கு உள்ளது.
இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் குழு முடிவு செய்தது. கோவிலின் நுழைவாயிலில் 5 நிலை கோபுரம் அமைக்கவும், விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி உள்பட பக்தர்கள் சாப்பிட பிரமாண்ட அறை, குடிநீர் வசதி என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் இரண்டரை கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
இதற்கு பொதுமக்கள் உதவி வருகிறார்கள்.
ஆலோசனைக்கூட்டம்
இந்த நிலையில் இன்று (23-ந் தேதி) திருப்பணி தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் மூலஸ்தான கோவிலில் நடந்தது. இதில் வருகிற கார்த்திகை மாதம் கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு கீழக்கடையத்தில் பாத்தியப்பட்ட வரிதாரர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாயும் 18 பட்டி வரிதாரர்களிடம் இருந்து ஐநூறு ரூபாயும் வரி வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் கீழக்கடையத்தைச் சேர்ந்த ஏழு தெரு தலைவர்களும், பதினெட்டுப்பட்டி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன் திருப்பணியும் கும்பாபிஷேகம் தடையின்றி நடந்தேற பத்திரகாளி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது.