July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் வீர தீர செயல் புரிந்த குழந்தைகள், பிரதான் மந்திரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

1 min read

Children who have done heroic deeds in Tenkasi district can apply for Pradhan Mantri Award – Collector Information

24.8.2023
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளில் வீரதீர செயல்கள், விளையாட்டு, சமூகசேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் பண்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் சாதனை புரிந்த குழந்தைகளை தேசிய அளவில் கவுரவப்படுத்தும் விதமாக 2024-ம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி ராஸ்ட்ரிய பால் புரஸ்கார் விருது இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட உள்ளது.
இந்த விருது வீரதீர செயல்புரிந்த குழந்தைகளு க்கான விருது மற்றும் சிறந்த குழந்தைகளுக்கான விருது என 2 பிரிவுகளாக வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி https://award.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

மாநில அரசு, மாவட்ட கலெக்டர், மாவட்ட நீதிபதிகள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில கல்வி நிலையங்கள், மத்திய அரசு கல்வி நிலையங்கள், நவேதயா கல்வி நிலையங்கள், தேசிய மற்றும் மாநில குழந்தைகள் உரிமை ஆணையம், சமூகநீதி அமைச்சகம், இளைஞர் நலம், விளையாட்டுத்துறை அமைச்சகம், பண்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், உள்துறை, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தனிநபர்களும் உரிய ஆவணங்களுடன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் இந்தியாவை சேர்ந்தவராகவும், இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்குள் விருதிற்கான சிறந்த செயல் மற்றும் சாதனை செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.