வி கே புதூர் அரசு பள்ளி ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது
1 min read
VK Pudur Govt School Teacher National Meritorious Award
28.8.2023
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு பள்ளியில் பணி புரியும் வேதியல் பிரிவு ஆசிரியை மாலதி ஒன்றிய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
தேசிய நல்லாசிரியர்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இரண்டு ஆசியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூர் அரசு பள்ளியில் 8,9,10, ம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பிரிவு ஆசிரியராக பணியாற்றி வரும் மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.இவரது பெற்றோர்கள் செங்கோட்டை அருகே உள்ள பெரிய பிள்ளை வலசை கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.
மாணவர்களிடையே கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் கல்விக்காக தனி செயலிகளை உருவாக்கி கற்றல் திறனை மேம்படுத்தியது, யோகா ரோபாட்டிக்ஸ், ஆகிய பயிற்சிகளை அளித்ததுடன் கொரோனா காலகட்டத்தில் யூடியூப் சேனல்கள் மூலம் பாடம் நடத்தி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சிறப்பாக பணியாற்றி முன் உதாரணமாக திகழ்ந்து உள்ளார்.
மேலும் இவர் தன்னிடம் படிக்கும் 5 மாணவர்களை கின்னஸ் விருது பெறுவதற்கு தயார்படுத்தி உள்ளார். இவரின் அர்ப்பணிப்புக்கான சேவையை பாராட்டும் வகையில் தமிழக அரசு கடந்த 2021 22 ஆம் ஆண்டு இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது.
தற்போது ஒன்றிய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியை மாலதி தேர்வாகியுள்ளார். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியை மாலதிக்கு ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இது பற்றி ஆசிரியை மாலதி கூறியதாவது:-
மத்திய அரசு நல்லாசிரியர் விருது வழங்க என்னையும் தேர்வு செய்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இது ஆசிரியர்களை மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற ஊக்கமாக அமையும். பொதுவாக அறிவியல் பாடம் கடினமானதாக மாணவர்களுக்கு தோன்றும். அதை எளிதாக படிக்கும் விதமாக கற்பித்ததால் மாணவர்கள் ஆர்வமுடன் அறிவியல் பாடத்தை படிக்கத் தொடங்கினார்கள். நான் 2008 ஆம் ஆண்டு திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் அரசு பள்ளியில் பணிகள் சேர்ந்தேன். 2012 ஆம் ஆண்டு ஜூலை முதல் வி கே புதூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.
எனக்கு தொடர்ந்து விருது வழங்கி ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்