July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் அண்ணாமலை யாத்திரை விவரம்

1 min read

BJP advises Tenkasi about Annamalai Yatra

29.8.2023
தென்காசி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் 03.09.2023 அன்று யாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமையில்
மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன் ராமநாதன்
மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்
சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்டபொறுப்பாளரு மான பொன் பால கணபதி
மாநில தொழில் பிரிவு செயலாளர் மகாதேவன்
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பார்வையாளர் மகாராஜன் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தென்காசி வட்டத்தில் பங்கேற்க இருக்கும் என் மண் என் மக்கள் என்கின்ற யாத்திரையும் யாத்திரையின் முடிவில் சங்கரன்கோவிலில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சம்பந்தமான மாவட்ட நிர்வாகிகள் மண்டல் தலைவர்கள் அணி பிரிவு நிர்வாகிகள் மண்டல் பார்வையாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன

ஆலங்குளம் சட்டமன்றத்திற்கு 03.09.23 காலை 9.மணிக்கு பொட்டல் புதூரில் தொடங்கி கடையத்தில் முடிப்பது என்றும், தென்காசி சட்டமன்றத்தில் 03.09.23 அன்று மாலை 3.30 மணி அளவில் கீழப்புலியூரில் தொடங்கி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் முடிப்பதாகவும்,

கடையநல்லூர் சட்டமன்றத்தில் 04 .09.23 அன்று காலை 9:30 மணிக்குமேலகடையநல்லூர் கடகலீஸ்வரர் கோவிலில் தொடங்கி கிருஷ்ணா புரத்தில் முடிப்பது என்றும்

04.09.23 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட
புளியங்குடி மின்சார அலுவலகம் முன்பு மாலை.4 மணிக்கு தொடங்கி டி என் புதுக்குடியில் முடிப்பது என்றும் சங்கரன்கோவில் சட்டமன்றத்தில் 06.09.23 அன்று மாலை 4 மணிக்கு என் ஜி ஓ காலனியில் தொடங்கி சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் முடிப்பது என்றும் பின்பு மாலை 6:00 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது
நடை பயணத்திலும் பொதுக்கூட்டத்திலும் தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதியில் இருந்தும் திரளான தொண்டர்களையும் பொதுமக்களையும் கலந்த கொள்ள செய்வது என்று முடிவு செய்யப்பட்டது

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட பாஜக துணைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், முத்துக்குமார், பாலமுருகன், முத்துலட்சுமி, மாவட்டச் செயலாளர்கள் ராஜலட்சுமி சுப்ரமணியன் அர்ஜுனன் மற்றும் மண்டல் தலைவர்கள் மண்டல் பார்வையாளர்கள் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.