ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் தமிழ் கனவு-தமிழ் மரபுபண்பாட்டு நிகழ்ச்சி
1 min read
Tamil Dream-Tamil Traditional Cultural Program at Alwarkurichi College
2.8.2023
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மாநிலங்கள வை உறுப்பினர் திருச்சி என். சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக் கிடையே தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் “தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் நடைபெற்றது.
மாணவ மாணவிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கையேடும். தமிழ்ப் பெருமிதம் என்கின்ற கையேடும் வழங்கப்பட்டது.
இதில் தமிழ் பெருமிதம் கையேட்டில் உள்ள ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தகவல் குறித்து ஒரு நிமிடத்தில் தங்களுடைய சிறப்பான கருத்துக்களை தெரிவித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பெருமித செல்வன் மற்றும் பெருமதிச் செல்வி என்கின்ற பட்டத்தோடு பரிசு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டி குறித்த கண்காட்சி. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பிலும், இதர கடன் உதவிகள் தொடர்பான கண்காட்சி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தாட்கோ நிறுவனத்தின் சார்பிலும், புத்தக அரங்குகள் மாவட்ட நூலகத்தின் சார்பிலும், சுய உதவி குழு தயாரித்த பொருட்களின் கண்காட்சி அரங்குகளும். முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலம் நான் முதல்வன் என்ற கண்காட்சி அரங்குகளும், மாவட்ட திறன் பயிற்சி துறை கண்காட்சி அரங்குகளும் மாவட்ட தொழில்மைய கண்காட்சி அரங்கு ஆகிய அரங்குகளில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார்..
இநிகழ்ச்சியில் ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முதல்வர் முனைவர்.மீனாட்சி சுந்தரம் , ஊராட்சிகள் உதவி இயக்குநர் பிரான்சிஸ், தென்காசி வட்டாட்சியர் சுப்பையன், மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிர மணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.