முதலியார்பட்டி அரசு பள்ளியில் தமிழக அரசின் சைக்கிள் வழங்கும் விழா
1 min read
Tamil Nadu government bicycle donation ceremony at Mudaliarpatti Government School
2.9.2023
தென்காசி மாவட்டம் கடையம ஊராட்சி ஒன்றியம்
முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில்90 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா சைக்கிளை திமுக மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் வழங்கினார்.
கடையம் ஊராட்சி ஒன்றியம், முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், கடையம் யூனியன் துணை சேர்மனுமான மகேஷ் மாயவன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி நாச்சியார் வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 90 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அலாவுதீன், திமுக ஒன்றிய பொருளாளர் அஜிஸ் அகமது, மாவட்ட பிரதிநிதிகள் மதிவாணன், பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி காளித்துரை, கிளைச்செயலாளர் நவாஸ்கான், நிர்வாகிகள் அலி,சேக்முகம்மது,சேக்கப்பா,மாரியப்பன்,அப்துல் ரஹ்மான்,சாகுல் ஹமீது, ரவிசங்கர்,ஆறுமுகம், தளபதி மணி,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கட்டி அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.