வெங்காடம்பட்டியில் 3011வது இரத்ததான முகாம்
1 min read
3011th blood donation camp at Venkadampatti
5.9.2023
இந்தியாவின் முதல் இரத்ததான கிராமமான தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி கிராமத்தில் 3011 வது இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ரஜினி இரத்ததான கழகத் தலைவர் வி. எஸ் மணியன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் படையப்பா சங்கர், முள் எலி ஆராய்ச்சியாளர் பவானி அபினேஷ் தாயின் மடியில் கோமதிநாயகம், பாவூர் சத்திரம் பாண்டியராஜா, சுரேஷ்குமார்,ஞானசெல்வன்ஆலங்குளம் லைப் லைன் பட்டு ராஜா, நிலவன் வேல்சாமி, மயிலை ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் தென்றல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் அனைவரையும் வரவேற்றார்.
இரத்ததான முகாமை செங்கோட்டை காந்தியவாதி ராம் மோகன் துவக்கி வைத்து பேசினார். முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன், அரிமா சசி ஞானசேகரன், ஆலங்குளம் விஜயன், விஜயகுமார், மெரிட் கல்லூரி மாணவர் டிரஸ்ட் கணேசன், சாம் ஜெபதுரை, சிவராம கிருஷ்ணன், டாணா பரமசிவன், டிரைவர் சாம் எபனேசர், கடையநல்லூர் காங்கிரஸ் காதர், சிவில் இன்ஜினியர் தங்க கார்த்திக் மற்றும் பலர் ரத்ததானம் செய்தனர்.
இந்த முகாமிற்கான ஏற்பாடு களை கடையநல்லூர் அயூப் கான், பியூலா, சுரேஷ், சக்தி சுவாதி, பிரவீன், சிவா, சுடலை பேச்சி, இசக்கியம் மாள் பெண் உலகம் சாந்தி, டிரஸ்ட் நன்னன், திப்பணம் பட்டி தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த முகாமில் குருதி சேகரிப்பிற்கு தென்காசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் என். அரவிந்த் ராம், வேளாங் கண்ணி, முகமது ரபீக் உதவினர். ரஜினிகாந்த் தொண்டர்கள், அ.தி.மு.க, காங்கிரஸர் கட்சி பிரமுகர்கள், அரிமாசங்கத் தினர் ஆர்வமாக முகாமிற்கு வந்திருந்தனர். 1987 ஆம் ஆண்டு துவங்கி தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல மாநிலங்கள், இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் இரத்ததான முகாம் சேவையை வெங்காடம்பட்டி கிராமத்தை சேர்ந்த பூ. திருமாறன் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இரத்த தான முகாமை பார்வையிட வும் விளக்கம் பெறவும் அடுத்த தலைமுறையான மாணவ மாணவியர், சிறுவர் சிறுமியர், குழந்தைகள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த முகாமில் இரத்த தானம் செய்ய ஆர்வமாக டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்திற்கு வருகை புரிந்தவர்களுக்கு சமூக நல ஆர்வலர் பூ. திருமாறன் நன்றி தெரிவித்தார்.