சாலை விபத்தில் சிக்கியவர்களை வாகனங்களில் இருந்து மீட்க புதிய திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min read
New scheme to rescue road accident victims from vehicles: M.K.Stalin launched
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான ‘வீரா’ அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்து, காவல்துறையினரின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார். இத்திட்டமானது, சாலை விபத்தில் சிக்கிய மற்றும் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக்கொள்ளும் பாதிக்கப்பட்ட நபர்களை, தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற காவல் குழுவினர் உதவியுடன் மீட்பதற்கான ஒரு முன்னோடி திட்டம் ஆகும்.