இரவணசமுத்திரம் ஊராட்சியில் புற்றுநோய் தடுப்பு முகாம்
1 min read
Cancer Prevention Camp in Ravanasamudram Panchayat
23.9.2023
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம்
இரவணசமுத்திரம் ஊராட்சி யில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நெல்லை கேன்சர் சென்டர் மருத்துவர் சந்தியா கலந்து கொண்டு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்தார்.இந்த முகாமில் இரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் எம்..முகம்மது உசேன் மற்றும் துணை தலைவர் இராமலெட்சுமி சங்கிலி பூதத்தான் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் இரவணசமுத்திரம் ஊராட்சி செயலாளர் மாரியப்பன் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் .
மேலும் புற்றுநோய் தடுக்கும் விதமாக விதமாக பிளாஸ்டிக் (கேரி) பை ஒழித்து மஞ்சள் நிற துணி பை பயன்படுத்த வேண்டும் என அனைவருக்கும் மஞ்சள் நிற துணி பை வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடு மக்கள் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. முடிவில் இரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் எம்..முகம்மது உசேன்
அனைவருக்கும் நன்றி கூறினார்.