June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மின் கட்டண உயர்வை குறைக்க கோரி உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம்

1 min read

Manufacturing companies strike to demand reduction in power tariff hike

24.9.2023
தென்காசி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களின் மின் கட்டண உயர்வை குறைத்திட வலியுறுத்தி
நடைபெற உள்ள உற்பத்தி நிறுத்த போராட்டம் வாயிலாக ரூ150 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மின்கட்டண உயர்வு

தமிழகத்தில் தொழில் துறை மின் கட்டணம் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில் தொழில் அமைப்புகளில் மின் கட்டண உயர்வை குறைத்திட வலியுறுத்தி வருகின்ற 25ம் தேதி(நாளை) திங்கள் அன்று ஒருநாள் அடையாள தொழில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது,
இந்த மனு தொடர்பாக சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பழகன் செய்தியாளர் களை சந்தித்து பேசினார்
அப்போது அவர் கூறியதாவது:-

மின்கட்டனை உயர்வை குறைப்பதன் வாயிலாக சிறு,குறு, நடுத்தர தொழில்கள் நல்முறையில் இயங்க கூடிய நிலை உருவாகும், அந்தவகையில் மின் கட்டண உயர்வை குறைத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்புடன் இணைந்து வருகின்ற 25ம் தேதி திங்கள் அன்று தென்காசி மாவட்டத்தில் அனைத்து சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அடையாள தொழில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
இந்த போராட்டத்தின் வாயிலாக மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மேலும் இந்த ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ரூ100 முதல் 150 கோடி வரையில் பொருளாதார வருவாய் இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.