முத்துமாலைபுரத்தில் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
1 min read
Sivanthi Adhithanar birthday party at Muthumalaipuram
26.9.2023
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள முத்துமாலைபுரம் கிராமத்தில் தென்காசி ராஜகோபுரம் கட்டி இரண்டு முறை கும்பாபிஷேகம் செய்து வைத்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 88 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முத்துமாலைபுரத்தில் அமைந்துள்ள கே.ஆதிநாராயணன் – சந்திரலீலா நினைவு மாலை நேர இலவச படிப்பகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான னஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் ஆசெண்பகராமன் செய்திருந்தார்.