தென்காசி அருகே மனைவியை கொலை செய்த கணவன் கைது
1 min read
Husband arrested for killing wife near Tenkasi
3.10.2023
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதுார் அருகே குடிபோதையில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள ஏந்தலுார் மேலத்தெருவை சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் முத்துப்பாண்டியன்(வயது 55). இவரது மனைவி துரைச்சி ( வயது 45 ) . இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
முத்துப்பாண்டியனின் சொந்த ஊர் தேவர்குளம் அருகே குவாச்சிபட்டி ஆகும்
முத்துப்பாண்டி
துரைச்சியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தற்போது முத்துப்பாண்டியன்
ஏந்தலூரில் தங்கியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.
முத்துப்பாண்டிக்கு தீராத குடிப்பழக்கம் இருந்துள்ளது.அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முத்துப்பாண்டியன் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது கணவன்,மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த கணவன் முத்துப்பாண்டி, வீட்டிற்கு வெளியில் கிடந்த ஒரு கல்லை தூக்கி மனைவி
துரைச்சியின் தலையில போட்டார். இதில் துரைச்சி இரத்த வெள்ளத்தில் பிணமாக சாய்ந்தார். அதைப்பார்த்து முத்துப்பாண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காலையில் நீண்ட நேரமாகியும் துரைச்சியின் வீட்டு கதவு திறக்கப்படாத தால், அருகில் உள்ளவர்கள் சென்று கதவை திறந்து பார்த்த போது துரைச்சி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
உடனடியாக இதுகுறித்து வீ.கே.புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து துரைச்சியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்
தப்பியோடிய முத்துப்பாண்டியனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முத்துப்பாண்டியன் வள்ளியூரில் இருப்பதாக தகவல் கிடைத்ததை
தொடர்ந்து போலீசார் வள்ளியூர் பஸ்ஸ்டாண்டில் வைத்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.