கடையத்தில் மிளா தாக்கி மீண்டும் வாலிபர் பரிதாப சாவு
1 min read
Milla hit the shop and again the teenager died tragically
3.10.2023
கடையத்தில் மிளா தாக்கி மீண்டும் வாலிபர் பரிதாப இறந்தார்
மிளா
தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகள் உள்ளன. இதில் சிறுத்தை, யானை போன்றவை செங்கோட்டை, பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி அணை பகுதியில் தரை இறங்கும். ஆனால் கடையம் பகுதியல் இவைகள் அதிகமாக வருவது இல்லை.
ஆனால் காட்டுப்பன்றி, மிளா போன்றவை அடிக்கடி தரைக்கு வரும். இவைகள் மலையை விட தரைப்பகுதியில் உள்ள புதர்களிலும், குன்றுகளிலும் அதிகம் வசிக்கினறன.
இவை விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்கின்றன. மேலும் தென்காசி கடையம் சாலையிலும் நடமாடுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாக வந்து செல்கின்றன.
இவைகளால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருவோர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவைகள் தாக்கி பலர் காயம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டுப்பன்றி கடையம் ஊருக்குள் வந்து சிறுவர்களை தாக்கியது.
வாலிபர்
இந்த நிலையில் மிளா தாக்கி கடையத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். கடையம் பெருமாள் கோவில் தெருவைச் (பழைய கிராமம்) சேர்ந்தவர் கோபி. இவரது மருமகன் பாலா என்ற பாலகிருஷ்ணன். பாலகிருஷ்ணனின் தந்தை பெயர் சொர்ணசுந்தரம். பாலகிருஷ்ணன் தென்காசியில் எம் ஆர் கே புக் சென்டர் நடத்தி வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடை முடித்து இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கீழ மாதபுரம் எடை மேடை நிலையம் முன்பு வரும்போது மிளா ஒன்றி சாலையில் நின்றது- அது பாலகிருஷ்ணனை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஐ கிரவுண்ட் ) அனுமிக்கப்பட்டார். ஆனால் நேற்று( 2.10.2023) இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுபற்றி வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வனவிலங்குகளை கட்டுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.