கடையம்: விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு சிவபத்மநாதன் ஆறுதல்
1 min read
Kadayam: To the families of the victims of the accident B. Sivapadmanathan
4/10/2023
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் கடையம் பகுதியை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் அக்குடும்பத்தினரின் வீடுகளுக்கு நேரில் சென்று, உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்செல்வன், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய அவைத்தலைவர்கள் ரவி, சேட், மாவட்ட பிரதிநிதிகள் அய்யன்சாமி , முகம்மது யாகூப்,அன்பழகன் கடையம் வடக்கு ஒன்றிய பொருளாளர் அஜீஸ் அகமது,
ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யா ராம்குமார், ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஜமீன், மாரி இசக்கி குமார்,முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆ.ஜெயராணி அண்ணாதுரை, பேரூர் கவுன்சிலர் சந்திரன், கண்ணன், சசிக்குமார், சுரேஷ், மகளிரணி பாண்டியராணி , அகமது ஈசாக்,மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஆதம் சுபேர், சக்தி சுப்ரமணியன், முகம்மது குணா, லெட்சுமணன், ராஜபாண்டி, அரசு ஒப்பந்த்தாரர் முருகன் , மகாராஜன், சேர்மலிங்கம், கமல் முருகன், ராஜேந்திரன், நவீன், பால்ராஜ், கருத்தபாண்டி,குணசேகரன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.