June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

1 min read

Caste atrocities have increased in Tamil Nadu – Governor RN Ravi’s speech

5.10.2023
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்தும் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது என்று நந்தனார் குருபூஜை விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

நந்தனார் விழா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மா.ஆதனூர் கிராமத்தில் தமிழ்நாடு தமிழ் சேவா சங்கம் சார்பில் நந்தனார் குருபூஜை விழா திருநாளைப்போவார் அவதார சன்னதியில் நடந்தது ஜோகா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்கினார் தமிழ்நாடு தமிழ் சேவா சங்க நிறுவனர் ஞான சரவணவேல் முன்னிலை வகித்தார் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி நாகராஜன் வரவேற்றார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நந்தனார் கோவிலுக்கு சென்று வழிபட்டார் மேலும் பொதுமக்கள் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து குருபூஜை விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட பூணூல் அணிந்து கொண்டனர் பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

நந்தனார் போல் உள்ள சிவ பக்தர் விழாவில் கலந்து கொள்வதில் பெரும்பாக்கியமா கருதுகிற நந்தபுரத்தையும் கற்று வருகிறேன் சனாதானத்தை பற்றி 3 உண்மைகளை கூறுகிறேன் முதலில் கடவுள் இந்த உலகத்தை சிருஷ்டித்தார் உலகத்தை தோற்றுவித்த பிறகு ஒவ்வொரு அசைவிலும் கடவுள் இருக்கிறார் நமது அனைவரின் உள்ளத்திலும் கடவுள் இருக்கிறார் நாம் எத்தனை வகை,வகையாக இருந்தாலும் நம் அனைவரிடம் கடவுள் இருக்கிறார்.
நம்முடைய பிரார்த்தனை முறைகள் வேறுபட்டு இருந்தாலும் நம் அனைவருடைய உள்ளங்களிலும் கடவுள் ஒருவர் குடியிருக்கிறார். வேதத்தில் நம்மில் யாரும் தாழ்வான ஒரு உயர்ந்தவர்களோ அல்ல. நாம் அனைவருக்கும் சமமானவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
மனிதர்கள்தான் பிரிவினையை ஏற்படுத்தி சூத்திரர்கள் என்று பிரித்து வைத்தார்கள் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருப்பது வேதனை அளிக்கிறது இந்த பாகுபாடு நாட்டில் எல்லா பகுதியிலும் இருந்தாலும் தமிழ்நாட்டில மட்டும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகளை கேட்கும் போதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கிறது காரணம் இந்த சமுதாயத்திற்கு மக்கள் தாழ்வார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது இத்தனை சாதிய வன் கொடுமைகள் திணிக்கப்படுவதை நினைக்கும் போது உண்மையிலேயே மனம் வேதனை அடைகிறது இந்த பாகுபாடு கல்வி பொருளாதாரம் ஒற்றுமையில் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது
இந்த சமுதாயத்தில் ஒரு மாபெரும் பிரிவினரை ஆலயத்திற்குள் பிரவேசிக்க தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதிரி செயல் எங்களுடைய இந்த சனாதன தர்மத்திலோ அல்லது இந்து மதத்திலயோ இல்லை. இந்த சாதிய வன்கொடுமைகள் எந்த அளவிற்கும் இருக்கிறது என்றால் வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கின்ற குடிநீர் தொட்டியில் மலத்தை கலக்கின்றார்கள்

நாங்குநேரியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களை நன்றாக படிக்கிறான் என்று ஆசிரியர்கள் பாராட்டியதற்காக ஒரு காரணமாகக் கொண்டு மாற்று சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களே அந்த மாணவனின் வீடு சென்று அவனை சராமாரியாக தாக்குகிறார்கள் இந்த மாதிரி கொடுமைகள் தமிழ்நாட்டில் தான் அதிகரித்து உள்ளது.
இந்த சமுதாயத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஒரு பஞ்சாயத்து யூனியன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி இந்துமதி என்றாலும் கூட அவர் பதவி பிரமாணம் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை இருக்கிறது வெறும் அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணம் வன்கொடுமை நடக்கும் போதும் அதிகபட்சமாக வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை தண்டிக்கப்படுவதில்லை ஆகவே இந்த சம்பவங்கள் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்த இழிவு நிலை தொடரும் ஆனால் எப்படி சுதந்திரமாக வாழ முடியும் நாம் அனைவரும் சமூக நீதிப் பற்றி பேசுகிறோம் ஆனால் அதே நிலை தான் தொடர்ந்து வருகிறது இதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் அரசியலில் வெளிப்படையாக நாம் இந்த மோசமான நிலையில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்க போராட்ட வேண்டும்.
நம் நாட்டில் ஒரு பிரதம மந்திரி இருக்கிறார் அவர் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் அனைத்து மக்களையும் தன்னுடைய சொந்த மக்களாக நினைத்து அவர்களுக்காக பாடுபட்டு வருகிறார் அனைவரும் ஒரே குடும்பமாக நடத்தப்படுகிறார்கள் இந்த சிந்தனை எங்கள் மகாகவி பாரதியார் உடையது நம் நாட்டில் இரண்டு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது அதில் ஒன்று அனைவரும் தம்முடைய குடும்பமாக நடத்தி வருகிறது. இன்னொன்று நாட்டு மக்களையும் மனரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து ஒரு வகையான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
பாரதியார் வாரிசுகள் போல இந்த நாட்டில் ஒரே குடும்பமாக குடும்பத்தினரை போல நாட்டின் வளர்ச்சிக்காகவும் உங்களுடைய வளர்ச்சிக்காகவும் நாம் அனைவரும் கைகோர்த்து ஒரே குடும்பமாக செயல்பட்டால் தான் நிச்சயம் ஒரு நல்ல எதிர்காலத்தை அடைய முடியும்
இவ்வாறு அவர் பேசினார்
விழாவில் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்க பொதுச் செயலாளர் மாறன் நாயகம், சுவாமி சகஜானந்த பேரன் ஜெயச்சந்திரன்,புனிதா இளவரசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள் இதில் தமிழ் சேவா சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிகளை ஆன்மீக கலாச்சார பண்பாட்டு பிரிவு மாநில தலைவர் பரமகுரு சிற்பி தொகுத்து வழங்கினார் முடிவில் மாநில அமைப்பாளர் பாவேந்தன் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.