முட்செடிகளை அகற்றி தீ வைத்தபோது விவசாயி கருவிச் சாவு
1 min read
The farmer died when he tripped and fell into the fire while clearing the garbage
8.10.2023
ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கையா (வயது 65). விவசாயி. இவருக்கு சொந்த மான தோட்டம் ஊருக்கு வட புறமாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை இனி தொடங்கும் என்பதால் வயலில் முளைத்திருந்த முட்செடிகளை அப்புறப் படுத்தி நெல் நடவுக்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். இதற்காக நேற்று மாலை அவர் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், முட்செடி மற்றும் புதர்களுக்கு அவர் தீ வைத்தார்.
அப்போது காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பக்கத்து வயல்களுக்கும் பரவியது. தீ பற்றி எரிந்ததால் தென்னை ஓலைகளை கொண்டு அதனை அணைக்க தங்கையா முயற்சி செய்து உள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் தீயில் தடுமாறி விழுந்தார்.
இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. அவர் கத்தி கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.