June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் அருகே பீடிக்கடையை முற்றுகையிட்ட பெண்கள்

1 min read

Women besieged a beedi shop near Bhavoorchatram

12.10.2023
சுப்பிரமணியபுரம், திருமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.
விடுமுறை நாட்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என கூறி பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.

பீடித் தொழிலாளர்கள்

பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் கிராமத்தில் தனியார் பீடி கம்பெனி இயங்கி வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களான ராம சந்திரபட்டணம், வென்னியூர், சுப்பிரமணியபுரம், திருமலா புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பீடி கம்பெனி நிர்வாகம் விடுமுறை நாட்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என கூறியும், தரமான பீடி இலைகள் மற்றும் தூள் வழங்கவில்லை என கூறியும் பெண்கள் கடையின் முன்பு திரண்டனர்.

சுமார் 1 மணி நேரமாக முற்றுகை போராட்டம் நீடித்த நிலையில் பீடி தொழிலாளர்களுடன் பீடி சங்க மாநில குழு உறுப்பினர் கற்பகவல்லி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மணிகண்டன், பீடி சங்க மாவட்ட தலைவர் குருசாமி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் தங்கம், பீடிசங்க மாவட்ட செயலாளர் மகாவிஷ்ணு, ராமசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.