June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் வளர்ச்சிதிட்டப் பணிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

1 min read

Development Plan Works in Tenkasi District – Survey by District Collector

14.10.2023
தென்காசி மாவட்டத்தில் கடையாலுருட்டி, அருணாசலபுரம், குருக்கள் பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந் திரன் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேர்ந்தமரம் மஜரா ஊராட்சி கடையாலுருட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.19.13 இலட்சம் மதிப்பீட்டில் நல்லதம்பி ஓடை வரத்துக் கால்வாயில் நீர் உறிஞ்சும் ஆழி அமைத்தல் பணியினையும், கடையாலுருட்டி கிராமத்தில் ஒன்றிய பொது நிதி 2023-2024 திட்டத்தின் கீழ் மா.பொ.சி தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணியினையும், கடையாலுருட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட பணிகளையும்,

நடுவக்குறிச்சி கிராமத்தில் எம்ஜிஎஸ்எம்டி 2022-2023 திட்டத்தின் கீழ் நடுவக்குறிச்சி அருணாசலபுரம் வரை ரூ.34.47 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல் பணியினையும், சின்னகோவிலான்குளம் கிராமத்தில் SIDS 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ.19.60 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கூடம் கட்டிட கட்டுமான பணியினையும், குருக்கள்பட்டி கிராமத்தில் ய 2023-2024 திட்டத்தின் கீழ் ரூ.6.16 இலட்சம் மதிப்பீட்டில் ஏடி காலனி தெருவில் பேவர் பிளாக் அமைத்தல் ஆகிய வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

விரைவில் வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்செல்வம், ஜெயராமன், உதவி பொறியாளர் சுப ஆனந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.