“ஏழை மக்கள் ஏழையாக இருக்க வேண்டும் என திமுக அரசு நினைக்கிறது” – அண்ணாமலை பேச்சு
1 min read
“DMK government thinks poor people should stay poor” – Annamalai speech
17.10.2023
“ஏழை மக்கள் ஏழையாக இருக்க வேண்டும் என திமுக அரசு நினைக்கிறது” என்று அண்ணாமலை நடை பயணத்தின்போது பேசினார்.
அண்ணாமலை
பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு பகுதியாக சென்று பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பொதுமக்களும் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அண்ணாமலை ஏற்கனவே தனது 2 கட்ட நடை பயணத்தை முடித்து நேற்று அவிநாசியில் தனது 3 -வது கட்ட நடை பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் கோவையில் இருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் பவானிக்கு என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ள அண்ணாமலை வந்தார். பவானி கூடுதுறை பிரிவு ரோட்டில் வந்த அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை பவானி கூடுதுறை பிரிவு தனது நடை பயணத்தை தொடங்கினார். வழி நெடுகிலும் சாலையின் இரு புரம் பொதுமக்கள் திரண்டு வந்து அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு திரண்டு இருந்த குழந்தைகள் அண்ணாமலைக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். பெண்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். ஈரோடு மேட்டூர் மெயின் ரோடு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பொது மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் அந்தியூர் பிரிவு ரோட்டில் திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-
சனாதனம்
பவானி கூடுதுறை காசிக்கு செல்ல முடியாதவர்கள் லட்ச கணக்கான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வருகிறார்கள் குஜராத் மாநிலத்தில் உள்ளது போன்று கூடுதுறையில் பவானி காவிரி அமுத நதி சங்கமிக்கும் இடமாக பவானி உள்ளது. இங்கு தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கலைக்கப்பட்டது.
தமிழகத்தில் யாரெல்லாமோ சனாதனம் ஒழிப்போம் என்று கிளம்பி உள்ளார்கள். ஆனால் 1802ம் ஆண்டு ஆங்கிலேய கலெக்டர் வில்லியம் சென் வேதநாயகி அம்மனை தரித்த வரலாறு உள்ளது. வெள்ளைக்காரனே சனாதன தர்மம் அழிக்க முடியாத நிலையில் தில்லு முல்ல திமுக அழிக்க பார்க்கிறது.
இந்தியாவில் இரண்டாவது இடத்தில் மஞ்சள் உற்பத்தி ஈரோட்டில் தான் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் பிரதமர் தேசிய மஞ்சள் வாரியம் அமைத்து உள்ளார். இதனால் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிக்கும்.
பவானி விவசாய பகுதி நிறைந்த பகுதியாக உள்ளது.7 40ஆண்டுகளுக்கு முன்பு காளிங்கராயன் மன்னர் மக்கள் பயன்பெறும் வகையில் வாய்க்கால் அமைத்தார்.
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் போன்றவர்கள் பவானிசாகர் அணையை போராடி கொண்டு வந்தார்கள். கீழ் பவானி திட்டத்திற்கு 933கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது.
விவசாயம் என்று சொன்னாலே திமுக காதை மூடிக்கொள்ளும். முன்னாள் முதல்வர் காமராஜர் அணை கட்டினார். ஆனால் திமுக அரசு மதுக்கடைகளை மட்டுமே திறந்து வருகிறது. ஏழை மக்கள் ஏழையாக இருக்க வேண்டும் என திமுக அரசு நினைக்கிறது. மதுக்கடைகளை மூடுவோம் என்று திமுக. சொல்கிறார். மதுவை உற்பத்தி செய்வது திமுகவினராக இருப்பதால் எப்படி மதுக்கடைகளை மூட போகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 9ஆண்டுகளில் வீடு இல்லாதவர்களுக்கு 37ஆயிரத்துக்கும் மேல் வீடுகள் கட்ட பட்டு உள்ளது. வீடுகள் தோறும் குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சேர்க்கும் வகையில் 3 லட்சத்து 15ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாக ஜல் ஜீவன் திட்டம் குடிநீர் திட்டம் கொண்டு வர பட்டுள்ளது.
1லட்சத்து 63ஆயிரம் வீடுகளுக்கு இலவச கழிப்பறை 5லட்சம் ரூபாய் காப்பீடு 1லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளனர். 95ஆயிரம் விவசாயிகள் ஆண்டு 6 ஆயிரம் ரூபாய் திட்டம் பயன் பெற்று வருகிறார்கள்.
1974ம் ஆண்டு பிறகு பவானி சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை ஆனால் சிறிய தவறாக 45ஆண்டுகளுக்கு பிறகு நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுக வந்துள்ளது.
திமுக நகரமன்ற தலைவர் குறித்து இரண்டு முறை ஊழல் பற்றிய செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. அதை கொண்டு வந்து வெளிப்படுத்தியது கம்யூனிஸ்டு கட்சி தான். நகராட்சி நடவடிக்கைகளில் மத்திய அரசு திட்டத்திற்கு திமுக நகரமன்ற தலைவர் ஸ்டிக்கர் ஓட்டி வருகிறார் நகரமன்ற தலைவர் பதவிக்கு வாங்கிய கார் திமுக நதர செயலாளர் குடும்பத்தினர் பயன்படுத்தி வருகிறார்.
புகை பிடித்தல் கேடு போன்று திமுக அனுமதித்ததால் கூட பொதுமக்களுக்கு கேடு தான். தமிழகத்தில் பட்டத்து இளவரசர் உதயநிதி க்காக ஆட்சி நடந்து கொண்டு உள்ளது.
இதனால் மக்கள் ஆசியோடு பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைய வேண்டும். முந்தைய திமுக காங்கிரஸ் கூட்டணியில் 2ஜி உள்ளிட்ட ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்ள 68 அமைச்சர் மேல் குண்டூசி கூட ஊழல் புகார் இல்லை. மக்கள் சொல்லும் வேலையை செய்யும் எம்பியாக பாஜக எம்பி.கள் இருப்பார்கள். திமுக எம்பி.ணை பார்க்க முடியாது. வீடுகள் தோறும் மின் கேஸ் இணைப்பு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட மத்திய அரசு நிறைவேற்றவது தான் பாஜகவின் நோக்கம். கனிமொழி எம்பி ஆனால் பெண்களுக்கு உயர்வு கிடையாது. ஏன் என்றால் அவர் கலைஞர் மகள். ஆனால் பாஜகவில் சாதாரண பெண்கள் தான் மாவட்ட தலைவராக உள்ளார்கள்.
ஏழை வீட்டு பெண்கள் எம்பி எம்எல்ஏக்களாக வர வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளார். இதனால் நரேந்திர மோடி கரத்தை பெண்கள் பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை 4:30 மணியளவில் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலையிலிருந்து அண்ணாமலை மீண்டும் தனது நடை பயணத்தை தொடங்கினார்.