குற்றாலம் சித்திரசபையில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
1 min read
Green Sathi Dandava Deeparathan for Nataraja at Courtalam Chitrasabha
17.10.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திருக்குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு நேற்று சித்திர சபையில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக் குற்றால நாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா கடந்த 9 ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
அதனைத்தொடர்ந்து நேற்று சித்திர சபையில் சிவ பூத கனவாத்தியங்கள் முழங்க நடராஜமூர்த்திக்கு 16 வகையான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து பச்சை சாத்தி தாண்டவ தீபாராதணை நிகழ்ச்சியும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக நாளை காலை 10 மணிக்கு மேல் விசு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குற்றாலநாதர் கோவிலில் திருவிழாவிவை முன்னிட்டு இலஞ்சி குமார கோவிலில் இருந்து அழைத்துவரப்பட்ட திருவிலஞ்சி குமரனுக்கு திருவிழா நிறைவடைந்ததை முன்னிட்டு மேளதாளம் முழங்க பிரியா விடை கொடுத்து வழி அனுப்பும் உபச்சார வைபமும் நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தக்கார் கவிதா உதவியாளர் கண்ணதாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.