தென்காசி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி- உற்சாக வரவேற்பு
1 min read
Edappadi Palaniswami in Tenkasi District – Enthusiastic welcome
18.10.2023
தென்காசி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடந்தது.
இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லை வழியாக சங்கரன்கோ விலுக்கு செல்கிறார்.
நெல்லையில் பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் பகுதியில் வைத்து நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
இதற்காக அப்பகுதியில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து, சால்வைகள் கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து நிர்வாகிகளின் வரவேற்பை பெற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி சங்கரன்கோவில் சென்றார். அங்கு நிர்வாகிகளின் வரவேற்புக்கு பின்னர் தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
அதன்பின் மாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டம் முடிந்த பின்னர் இரவில் காரில் புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்றார்.
பின்னர் காரில் சேலம் செல்கிறார்.
முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கள் கருப்பசாமி பாண்டியன், ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம்,
மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட மகளிரணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, திசையன்விளை நகர செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மூலக்கரைப்பட்டி நகர துணை செயலாளர் எடுப்பல் காளி முத்து, டவுன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்கு ட்டி பாண்டியன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், கவுன்சிலர்கள் சந்திரசேகர், முத்துலெட்சுமி, நெல்லை ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிமுகமது சேட், வக்கீல் ஜெயபாலன், தச்சை பழனிசங்கர், வட்ட செயலாளர் பாறையடி மணி, மேற்கு பகுதி பொருளாளர் காளிமுருகன், இளைஞரணி விஷ்வகணேஷ் மற்றும் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.