பள்ளி வாகனம் விபத்து; ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி மீட்பு
1 min read
school vehicle accident; Ranipet Collector Varamati Recovery
20.10.2023
காவேரிப்பாக்கம் அருகே பள்ளி வாகனம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி குழந்தைகளை மீ்ட்டு அனுப்பி வைத்தார்.
பள்ளி வாகனம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் இருந்து பொன்னப்பந்தாங்கள் செல்லும் கிராம சாலை வழியாக கள ஆய்வுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனம் திடீரென புதுப்பட்டு காலனி பகுதி அருகே சாலையோரம் சென்று சாய்ந்து விட்டது.
இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் வளர்மதி உடனடியாக வாகனத்தில் இருந்த குழந்தைகளை மீட்டார். அவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என தெரிந்த பின்பு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களின் வாகனத்தில்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
-சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.