அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 2 பேர் கைது- ரகசிய இடத்தில் விசாரணை
1 min read
2 arrested in AIADMK councilor’s murder case – investigation at a secret place
23.10.2023
செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கீரப்பாக்கம் பகுதியில் அன்பரசன் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
முன்பகை காரணமாக கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில், கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
கொலை வழக்கில் சுதர்சன், பாலாஜி ஆகிய இருவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.