செங்கம் அருகே பஸ் மீது கார் மோதியதில் 7 பேர் பலி
1 min read
7 people tragically lost their lives when a car collided with a bus near Sengam
24.10.2023
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதியது. இதில் தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் கம்பெனியில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 100 பேர் வேலை செய்கின்றனர். ஆயுதப் பூஜை முன்னிட்டு கம்பெனி சார்பில் புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதில் 10 பேர் சுற்றுலா செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதற்காக காரில் புறப்பட்டனர். காரை தேன்கனிக்கோட்டையை சேர்ந்த புனித்குமார் (23) என்பவர் ஓட்டிச்சென்றார். அசாம் மாநிலத்தை சேர்ந்த ருக்குராய் (24), நாராயணாசேட்ஜி (35), தாலுநிக்காலாய் (30), ஓசூரை சேர்ந்த காமராஜ் (29) உள்பட 10 தொழிலாளர்கள் சென்றனர்.
இவர்கள் அனைவரும் நேற்று ஓசூரில் இருந்து புதுச்சேரிக்கு சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிபார்த்துவிட்டு அன்றிரவு அங்கேயே தங்கினர். நேற்று மாலை ஓசூர் புறப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கிருஷ்ணாநகர் கூட்ரோடு வழியாக கார் வந்தது. இரவு 9 மணியளவில் அங்குள்ள வளைவை கடந்தபோது எதிரே பெங்களூருவில்ருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதியது.‘
7 பேர் பலி
இதில் கார் டிரைவர் புனித்குமார், தொழிலாளர்கள் காமராஜ், ருக்குராய், நாராயணாசேட்ஜி, விமல் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக மேல்செங்கம் போலீசார் மற்றும் செங்கம் தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புதுறையினர் விரைந்து வந்து பொதுமக்களின் உதவி இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்திருந்த தாலு, நிக்காலாய் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த டோலா, சுபான் (25), கிருஷ்ணப்பா (40), விக்காராய் ஆகிய 6 பேரை மீட்டனர். அவர்கள் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிறிதுநேரத்தில் தாலு, நிக்காலாய் ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதையடுத்து மற்ற 4 பேரை தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மேல்செங்கம் போலீசார் வழக்குப்பதிந்து தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த அரசு பேருந்து டிரைவர் முனிரத்தினம் (42), தர்மபுரி மாவட்டம் மோட்டூரை சேர்ந்த நடத்துனர் முருகன் (48) ஆகிய இருவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதித்தது. இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்தவுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், மு.பெ.கிரி எம்எல்ஏ, துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவெற்றிவேல் செங்கம் தாசில்தார் முருகன் ஆகியோர் நள்ளிரவு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
தொடர் விபத்துகள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் குறிப்பாக விபத்தில் சிக்கும் பெரும்பாலான வாகனங்கள் வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவையாக உள்ளது. குறிப்பாக அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி வருவதும் விபத்துக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. தமிழகத் தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும்போது இருக்கைகளுக்கு அதிகமான நபர்கள் ஏற்றப்பட்டிருந்தால் அம்மாநில போக்குவரத்து துறை அல் லது அதிகாரிகள் அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால் தமிழகத்திற்குள் வரும் பெரும்பாலான வெளிமாநில வாகனங்களை அதிகாரிகள் சரிவர கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. செங்கத்தில் திங்களன்று இரவு நடந்த விபத்துக்குள்ளான டாடா சுமோ காரில் 7 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால் 11 பேர் சென்றுள்ளனர்.
இதேபோன்று கடந்த வாரம் அமாவாசையன்று மேல்மலையனூர் சென்று பெங்களூரு திரும்பிய காரில் 4 பேருக்கு பதில் 8 பேர் பயணித்தனர். இந்த கார், லாரி மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர தினசரி விபத்துகளும் தொடர்கிறது.
6 மாதங்களில்
பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் போக்குவரத்து விதிமீறல், குடிபோதை, தூக்க கலக்கத்துடன் வாகனத்தை ஓட்டுதல் போன்றவையே விபத்துக்கு காரணம் என கூறுகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் இதனை 6 மாதங்களில் 40 பேர் பலி செங்கம் பகுதியில் கடந்த சில மாதங்களாக விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரவு, பகல் என பாராமல் சிறுசிறு விபத்துகளும் அதிகளவில் நடந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் சுமார் 70 விபத்துகள் ஏற்பட்டு அவற்றில் சுமார் 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது