பாஜக விலகியதால் முதல் அமைச்சர் அச்சத்தில் உள்ளார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min read
Chief minister is scared as BJP withdraws: Edappadi Palaniswami speech
24.10.2023
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் உள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் உள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதை விமர்சிக்கின்றனர். ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பது, விலகுவது வழக்கமானது.
திமுக தேர்தல் முகவர் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னைப் பற்றிதான் அதிகம் பேசியுள்ளார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னைப்பற்றி பொய்யான விமர்சனம் செய்கிறார்.
100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தையும் முதல் அமைச்சர் கிடப்பில் போட்டுள்ளார். வரிகளை எல்லாம் உயர்த்தியும் அரசிடம் நிதி பற்றாக்குறை தான் உள்ளது. கொள்கைக்கும் திமுகவுக்கும் சம்பந்தமே இல்லை. ஆட்சி அதிகாரத்துக்குத்தான் சம்பந்தம் உள்ளது.
அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு முடிக்கும் தருவாயில் இருந்தது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. அந்த கட்டடங்களே தற்போது திறந்து வைக்கப்படுகின்றன. நான் எப்போதும் பொய்யான செய்தியை கொடுத்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.