June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சுரண்டையில் அனுமதியின்றி பாஜக கொடி யேற்றிய – 27 பேர் கைது

1 min read

27 people arrested for hoisting BJP flag without permission in Suranda

2.11.2023
தென்காசி மாவட்டம் சுரண்டையில் உரிய அனுமதியின்றி பாஜக கொடியேற்றிய பாஜக மாவட்ட தலைவர் கே.ஏ.ராஜேஷ்ராஜா உட்பட 27 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை- சேர்ந்தமரம் சாலையில் உரிய அனுமதியின்றி தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் சுரண்டை நகர பாஜக சார்பில் நேற்று மதியம் திடீரென கொடிக்கம்பம் அமைக்கப் பட்டு பாஜக கொடி ஏற்றப்பட்டது.

தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து தலைமையில் போலீசார் விரைந்து வந்து கொடிக்கம்பத்தை அகற் றினர். பின்னர் மாலையில் தென்காசி மாவட்ட பா.ஜனதா தலைவர் கே.ஏ.ராஜேஷ்ராஜா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஒரு கொடிக் கம்பத்தை கொண்டு வந்து அதே இடத்தில் பாஜக கொடியை ஏற்றினர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ஆலங்குளம் துணை சூப்பிரண்டு பர்ணபாஸ் தலைமையில் ஆய்வாளர் சாகுல் ஹமீது, உதவி ஆய்வாளர் அலெக்ஸ் மேனன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உரிய அனுமதி பெறாமல் மீண்டும் வைக்கப்பட்ட பாஜக கொடி கம்பத்தை அகற்றியதோடு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா உட்பட 27 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

இதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.அன்புராஜ், மாவட்ட பொது செயலாளர் கே.எம். அருள்செல்வன் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சுரண்டை மண்டல் பார்வையாளருமான முருகேசன், கலை கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் கேபிள் பவுன்ராஜ், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் வெற்றிவேல்,ராயல் ராமசாமி , அமைப்புசாரா பிரிவு மாவட்ட துணை தலைவர் ஓவியா,
மாயாண்டி,கணேசன்,
அய்யாசாமி,
ராமர்,தர்மராஜ், பழனி, பேஷன் குமார்,வசந்த் மாரியப்பன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய துணை தலைவர் பாலசுப்பிரமணி யன்,உட்பட பாஜக நிர்வாகிகள் 27 பேர்களை கைது செய்த போலீசார் அவர்களை சுரண்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு 8 மணிக்கு அனைவரும் விடுவிக்கப் பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.