அம்மாபேட்டை அருகே விபத்தில் இறந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்பு தானம்
1 min read
Organ donation of a laborer who died in an accident near Ammapet
1.12.2023-
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த மூலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 31). கூலித் தொழிலாளி. திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாதேஷ் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மாதேஷ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதேஷ் நேற்று மாலை மூளை சாவு அடைந்தார்.
இதை எடுத்து அவரது உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து மாதேஷின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து இன்று மாதேஷின் உடலுக்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக மரியாதை செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.