தென்காசி மாவட்ட கிரைம் செய்திகள்
1 min read
Tenkasi District Crime News
1.12.2023
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் காலனி பகுதியில் வசித்து வரும் திருமலை குமார் மற்றும் அவரின் தம்பி மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டபோது அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான ராஜேஸ்வரி சமாதானம் செய்ய சென்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த திருமலை குமார் நாங்கள் சண்டையிட்டால் நீ ஏன் தடுக்கிறாய் என்று கூறி அவரை கீழே தள்ளி தென்னை மட்டையால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து ராஜேஸ்வரி ஆய்க்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரி விசாரணை மேற்கொண்டு மேற்படி கிருஷ்ணன் என்பவரின் மகன் திருமலை குமார்(வயது 38) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.
—====
இலஞ்சியில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட 2 பேர் சிறையில் அடைப்பு
குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சி, வள்ளியூர் பகுதியில் காவல் ஆய்வாளர் திருமதி. ராஜகுமாரி அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (வயது 42) மற்றும் மாதவன்(வயது 39) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவல்க்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 19,000/- மதிப்பிலான 1 கிலோ 900 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
==
சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர் கைது
தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் காவல் நிலைய எல்கைகுட்ப்பட்ட ராஜபாண்டி பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் மாரிராசு(வயது 24) மீது சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணி பாஸ்கர் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 07 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது..
===
முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சிந்தாமணி என்பவரின் மகன் ராமச்சந்திரன்(63) என்ற நபரை சார்பு ஆய்வாளர் ரவி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 328 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.