June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது

1 min read

Enforcement officer arrested for taking bribe

2.12.2023
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரிடம் 20 லட்சம் லஞ்ச பணமாக பெற்று தப்ப முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து திண்டுக்கல்லில் விசாரணை நடத்தி கைது செய்தனர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல்
நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேராசிரியர்

திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி பேராசிரியராக பணிபுரிபவர் சுரேஷ் பாபு. திண்டுக்கல் பழனி ரோட்டில் தனியார் மருத்துவமனையும் நடத்தி வருகிறார். கடந்த 2018 ம் ஆண்டு அவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு பதிவு நடைபெற்று முடிவுற்றது.
அந்த வழக்கை அமலாக்கத்துறை அதிகாரியான மதுரையில் பணிபுரியும் அங்கித் திவாரி, டாக்டர் சுரேஷ் பாபுவிடம் அந்த வழக்கு அமலாக்கத்துறையில் உள்ளது.. அதிலிருந்து விடுவிக்க 3 கோடி கொடுக்க வேண்டும் என மிரட்டி பேரம் பேசியுள்ளார்.
இதில் டாக்டர் சுரேஷ்பாபு 51 லட்சம் தருவதாக இருவரும் ஒப்புக்கொண்டனர்.
அதன்படி நவம்பர் மாதம் 1-ந் தேதி நத்தம் ரோட்டில் வைத்து ரூபாய் 20 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மீதமுள்ள 31 லட்சத்தை கேட்டு அமலாக்கத்துறை அதிகாரி மருத்துவரை அடிக்கடி மிரட்டியுள்ளார்.
இதனை டாக்டர் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். ரூ.20 லட்சம் நேற்று தருவதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் கூறியதாக தெரிகிறது.
அதனையடுத்து நேற்று காலை திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார் நத்தம் பிரிவில் பணம் வழங்கப்பட்டது. அதனை நோட்டமிட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும்
களவுமாக பிடிக்க முற்பட்டபோது, சுதாரித்த அமலாக்கத்துறை அதிகாரி மதுரை நோக்கி காரை விரைவாக ஓட்டியுள்ளார்.

உடனே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடைரோடு டோல்கேட்டில் தகவல் தெரிவிக்கவும், அங்கே பணியில் இருந்த போலீசார் அமலாக்கத்துறை
அதிகாரியை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அங்கிருந்து அமலாக்கத்துறை அதிகாரியும் ஓட்டி வந்த காரையும் அவரையும் திண்டுக்கல்லில் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் வைத்து 12 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், மத்திய பிரதேசம் போபால்
நகரைச் சேர்ந்தவர் அங்கித் திவாரி (வயது 32). கடந்த 2018 உதவி அமலாக்கத்துறை அலுவலராக பணிக்கு சேர்ந்து உள்ளார். கடந்த 2022-ல் அமலாக்கத்துறை அலுவலராக பதவி உயர்வு பெற்று
2023-ல் மதுரையில் பணிக்கு சேர்ந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை நீதிபதி முன் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர் படுத்தினர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.