சென்னையில் தொடர்மழையில் சுவர் இடிந்து 2 பேர் சாவு
1 min read
2 people died in Chennai due to wall collapse due to continuous rain
4.12.2023
சென்னையில் ‘மிக்ஜம்’ புயலால் நேற்று நள்ளிரவு முதல், தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் பெய்துவரும் தொடர்மழையால், கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கானாத்தூர், ஈசிஆர் இந்திராகாந்தி தெருவில் புதியதாக கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நிலையில், மழையில் நனைந்திருந்த கட்டடத்தின் ஒருபக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அதில், கட்டடத்தினுள் தங்கியிருந்த 20 வயதான ஜாகீர் மற்றும் 30 வயதான அப்ரோஸ் ஆகிய இரு இளைஞர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.