June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் மழை:45 ஆண்டுகளாக நடக்கும் கூத்துக்கள்- அண்ணாமலை கண்டனம்

1 min read

Rain in Chennai: 45 years of rumors – Annamalai condemned

6.12.2023
மழை பாதிப்புகள் பற்றி அண்ணாமலை கூறும்போது, “45 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் கூத்துகளை மக்கள் பார்த்து விட்டார்கள். சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும்” என அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை

சென்னை தியாகராய நகரில் இன்று(புதன்கிழமை) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னையில் இன்னும் 30 சதவீத இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. 3 நாட்களாக பாஜ.க. வினர் களப்பணியில் உள்ளனர்.

திமுக எம்பிக்கள் சென்னையில் பணியில் இல்லாமல் பாராளுமன்றத்தில் மாட்டு மூத்திரம் என்று பேசி கொண்டு இருக்கிறார். அதிமுகவின் தவறுகளை சரிசெய்ய ரூ. 4 ஆயிரம் கோடி செலவானது என்று திமுக எம்.பி கனிமொழி சொல்கிறார். பொய்யை மாற்றி மாற்றி சொல்லி எத்தனை நாட்கள் வண்டி ஓட்டுவார்கள்.
45 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் கூத்துகளை மக்கள் பார்த்து விட்டார்கள். இதில் இருந்து விடுதலை வேண்டும் என சென்னை மக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். 45 ஆண்டு கால அவலங்களுக்கு சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.