June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னை சகஜ நிலைக்கு திரும்ப ஓரிரு வாரங்கள் ஆகும்: அப்பாவு பேட்டி

1 min read

It will take a couple of weeks for Chennai to return to normalcy: Speaker Appavu

8.12.2023
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் ஓரிரு வாரங்கள் தேவைப்படும். உள்ளூர் மற்றும் வெளியூர் பணியாளர்கள் தீவிரமாக பணி செய்து வருகின்றனர். முதலமைச்சர் ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதாக சொன்னால் அனைத்து எம்.எல்.ஏக்களும் கொடுத்து விடுவார்கள்.

நானும் எனது ஒரு மாத சம்பளத்தை கொடுக்கிறேன். பொத்தாம் பொதுவாக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லக்கூடாது. மக்களையும் வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவிக்கு அழைத்ததில் தவறில்லை.

அரசை வெள்ள தடுப்பு பணிகளில் செய்த செயலை விமர்சனம் செய்தால் அங்கு பணி செய்யும் அதிகாரிகளின் பணிகளை கொச்சைப்படுத்துவதைபோல் உள்ளது. ரூ.4 ஆயிரம் கோடி பணத்தினை செலவு செய்ததால் தான் மழையால் சேர்ந்த நீர் உடனடியாக வடிந்துள்ளதை பார்க்க முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.