செங்கோட்டை திமுக நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்-தி.மு.க.வும் கடிதம்
1 min read
Sengotta DMK City Council President passed a no-confidence motion
9.12.2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் திமுக நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள், நகர்மன்ற ஆணையாளரிடம் கடிதம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்
நகரசபை தலைவர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் ஆகியோர் மீது திமுக உறுப்பினர்களே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்த சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் சங்கரன்கோவில் நகர் மன்ற திமுக தலைவர் பதவி தப்பியது.
இந்த நிலையில் நேற்று செங்கோட்டை திமுக நகர்மன்றத் தலைவர் மீது திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் 19 நகர் மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம். செங்கோட்டை நகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று அதன் பிறகு அதிமுக பாஜக உறுப்பினர்களின் ஆதரவோடு நகர்மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இராமலெட்சுமி. இவர் கடந்த ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
அன்று முதல் அதிமுக மற்றும் பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் நகர் மன்ற தலைவர் இராமலட்சுமிக்கு எதிராக செயல்பட தொடங்கினார்கள். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒவ்வொரு நகர்மன்ற கூட்டத்திலும் எந்த தீர்மானமும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு செய்து வந்தனர்.
இந்த நிலையில் நகர்மன்ற தலைவர் இராமலெட்சுமி செங்கோட்டை நகர பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும், அரசு பணத்தை கையாடல் செய்து வருவதாகவும் அதிமுக பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை தெரிவித்து வந்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளை காரணமாக கொண்டு கடந்த இரண்டு கூட்டங்களை புறக்கணித்தனர். இதனால் உரிய கோரம் இல்லாததால் நகர் மன்ற கூட்டம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இதை எல்லாம் கண்டிப்பதோடு திமுக நகர்மன்ற தலைவிக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய திமுக உறுப்பினர்கள் சிலர் இதனை கைகட்டி வேடிக்கை பார்த்து வந்தனர்.
செங்கோட்டை நகர மன்ற தலைவியாக திமுகவை சேர்ந்த இராமலெட்சுமி என்பவர் தற்போது பதவி வகித்து வரும் நிலையில், இவர் மீது திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக வை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் 19 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி நகர மன்ற ஆணையாளரிடம் மனு ஒன்றை அளித் துள்ளனர்.
அந்த மனுவில், செங்கோட்டை நகர்மன்ற பகுதிகளுக்கு உட்பட்ட பகுதி யில் மேற்கொள்ளப்பட்டு வரும் செலவினங்கள் மற்றும் வருவாய்கள் குறித்து எந்த விதமான முறையான தகவல் களையும் நகர்மன்ற தலைவி இராமலெட்சுமி வழங்குவதில்லை என்றும், மேலும் நகர்மன்ற கூட்டத்தின் போது உறுப்பினர்கள் முன் வைக்கும் எந்த விதமான பிரச்சினைகளையும் பதி வேட்டில் பதிவு செய்து இல்லை என்றும் அதில் நகரமன்ற தலைவி கையெ ழுத்திடாமலும், பொது மக்களின் குறைகளை நிறைவேற்றாமல் இருப்ப தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி யுள்ளனர் எனவும். ஆகையால் செங் கோட்டை நகரமன்றத் தலைவியாக உள்ள இராமலெட்சுமி என்பவர் இப்பதவி வகிக்க தகுதி இல்லாத நபர் என கருதி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரிக்கை வைப்பதாக கூறி நேற்று அதிமுகவை சேர்ந்த 10 கவுன்சிலர்களும், பாஜகவை சேர்ந்த 3 கவுன்சிலர்களும் நகர்மன்ற தலைவி இராமலெட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி ஆணையாளர் சுகந்தி இடம் மனு ஒன்றை அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் செங்கோட்டை நகராட்சிக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டதாக கருதி அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் சற்று நேரத்தில் அதைவிட அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதாவது திமுகவை சேர்ந்த 6 நகர்மன்ற உறுப்பினர்களும் திமுக நகர் மன்றத்தலைர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி ஆணையாளரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ,பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திமுக நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஆணையாளரிடம் கடிதம் கொடுத்த திமுக நிர்வாகிகள் பேபி ரஜப் பாத்திமா,இவர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி தலைவியாக பதவி வகித்து வருகிறார்.இசக்கியம்மாள்ன் இவர் முன்னாள் திமுக மாவட்ட பிரதிநிதி, சந்திரா குட்டிராஜ், இவர்முன்னாள் நகர திமுக துணைச் செயலாளர்,இசக்கித்துரை இவர் முன்னாள் நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர், சரவண கார்த்திகை இவரும் திமுக பிரமுகர் தான்,முருகையா இவர் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக நகர்மன்ற தலைவர் மீது அதிமுக மற்றும் பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது அரசியல் ரீதியானது இது எதிர்கட்சியினர் அரசியலுக்காக செய்யக்கூடிய வேலைதான்.ஆனால் திமுக நகர் மன்ற தலைவர் மீது திமுக நகர்மன்ற உறுப்பினர்களை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சிப்பது வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது.
இந்தப் பிரச்சினையில் உடனடியாக திமுக தலைமை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவி திமுக விடம் இருந்து பறிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருதுகிறார்கள் இந்தச் சம்பவம் செங்கோட்டை பகுதியில் மட்டுமின்றி தென்காசி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.