தென்காசி வேலைவாய்ப்பு முகாமில் 562 பேருக்கு பணி நியமன ஆணை
1 min read
Employment order for 562 people in Tenkasi employment camp
10.12.2023
தென்காசி மாவட்டத்தில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமண ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் கலைஞரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமண ஆணை வழங்கும் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி முன்னிலையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கும் பெண் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு பெண்கள் நலன் சார்ந்த அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் நல்ல வேலைவாய்ப்பு பெற்று வேலையில் அமர்ந்தால் தான் சொந்த காலில் நின்று தங்கள் பெற்றோருக்கு உதவி செய்ய முடியும். படித்துவிட்டு வேலை வாய்ப்பு தேடி இளைஞர்கள் தேவையற்ற அலைச்சலின்றி அரசு தனியார் துறைகள் மூலம் வழங்கும் வேலை வாய்ப்பை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் 924 ஆண்களும் 1312 பெண்களும் 12 மாற்று திறனாளிகள் உட்பட 2248 பேர் கலந்து கொண்டுள்ளனர். 102 வேலை வழங்குநர்கள் இம்முகாமில் பங்கு பெற்றுள்ளனர். இவ்வாய்ப்பினை வேலை நாடுநர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி வேலை தேடி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில்சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வேலை நாடுநர்கள், சரியான வேலை வாய்ப்பை தேர்ந்தெடுத்து வேலையில் அமர்ந்து தங்களை கஷ்டப்பட்டு பலசிரமங்களுக்கு மத்தியில் படிக்க வைத்து ஆளக்கிய பெற்றோருக்கு உதவி செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். 227 ஆண்களும் 288 பெண்களும் உட்பட 562நபர்கள் இம்முகாமின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், துணைத் தலைவர்கே.என்.எல்.சுப்பையா, நகர்மன்ற உறுப்பினர் வெ.வசந்தி வெங்கடேஸ்வரன்,திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) டாக்டர்.கே.சண்முகசுந்தர், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் .சையது முகம்மது,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.