June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே அய்யப்ப பக்தர் கார் கவிழ்ந்து 2 பேர் பலி

1 min read

Ayyappa devotee’s car overturned near Tenkasi, 2 killed

11.12.2023

தென்காசி அருகே சபரிமலை சென்று விட்டு ஊர் திரும்பிய ஐயப்ப பக்தரின் கார் கவிழ்ந்து 2 பேர் பலி யானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி பகுதியில் அய்யப்ப பக்தர்கள் சென்று கொண்டிருந்த ஒரு காரின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதியது இதில் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் மற்றும் காரில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய ஒரு பெண் மற்றும் 5 ஐயப்ப பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்த பெண் உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.. மீதமுள்ள நான்கு பேர்களும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் வேலூர் பகுதியைச் சார்ந்த கோடீஸ்வரன் (வயது 44) தனது உறவினர்களுடன் காரில் சபரிமலைக்கு சென்று விட்டு தென்காசி கடையநல்லூர் வழியாக தனது சொந்த ஊரான வேலூர் திரும்பி சென்று கொண்டிருந்தனர் அப்போது கடையநல்லூர் அச்சம்பட்டி பெட்ரோல் பங்க் பகுதியில் கார் சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது அப்போது சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது மனைவி மாலையம்மாள் (வயது 55) என்பவர் மீது மோதி சாலை ஓரம் கவிழ்ந்தது.

இதில் மாலையம்மாள் மற்றும் அந்தக் காரில் பயணம் செய்த கோடீஸ்வரன் (வயது 44) அவரது மாமனார் முகில் ரெட்டி (வயது 55) பிருதிவிராஜ் (வயது 6) கார் டிரைவர் சுரேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கடையநல்லூர் போலீசார் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாலையம்மாள் மற்றும் முகில் ரெட்டி ஆகிய இருவரும் இறந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த நான்கு பேர்களும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இது பற்றி கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.