June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூரில் மாநில அளவிலான கபடி போட்டி

1 min read

State Level Kabaddi Tournament at Audayanur

11.12.2023

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
ஆவுடையானூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பரிசு வழங்கி பாராட்டினார்.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் என்.ஜி.எம்.கபடி குழு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல்பரிசு ரூ.15 ஆயிரம் மீனாட்சிபுரம் அணியும், 2வது பரிசு ரூ.10 ஆயிரம் ஆவுடையானூர் எம்.ஜி.எம். அணியும், 3வது பரிசு ரூ.5 ஆயிரம் குறும்பலாப்பேரி அணியும் பெற்றது. பரிசளிப்பு விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ், திமுக நிர்வாகிகள் ரவிக்குமார்,நாகராஜன், ராஜேந்திரன், பாலமுருகன், வளனரசு, சுதன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆவுடையானூh என்.ஜி.எம். அணியினர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.