பாராளுமன்றத்திற்கு புகுந்து கண்ணீர் புகை குண்டு தாக்குதல்
1 min read
A teargas attack broke into Parliament
13.12.2023
நாடாளுமன்ற தாக்குதல் தினமான இன்று தலைநகர டெல்லி உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது கோஷம் எழுப்பியபடி பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இரு மர்ம இளைஞர்கள் கண்ணீர் புகை வீசினார்கள்.
அந்த இளைஞர்கள் இருவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது 5 தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். இதில் காவலர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய ஐந்து தீவிரவாதிகளும் பின்னர்சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் நடைபெற்று இருபத்தி ரெண்டாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் காலையில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். தாக்குதல் தின நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் நாடாளுமன்ற மக்களவை கூ்ட்டம் தொடங்கி கேள்வி நேரம் முடிந்ததும் பாதுகாப்பை மீறி துணிகர அத்துமீறல் தாக்குதல் நடந்துள்ளது. பார்வையாளர் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென “சர்வாதிகாரம் ஒழிக ‘கோஷத்துடன் கூட்ட வளாகத்தில் குதித்தனர்.
அவர்கள் கையில் கேஸ் சிலிண்டர் வைத்திருந்தனர். இருக்கைகள் மீது துள்ளிக் குதித்து ஓடிய அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த சிலிண்டர்களை திறந்து மஞ்சள் நிற புகையை வெளியேற்றினார்கள். அச்சத்தில் உறைந்திருந்த எம்பிக்கள் மர்ம மனிதர்களிடம் வெடிகுண்டு இருக்குமோ என்ற தயக்கத்தில் சிறிது நேரம் திகைத்து நின்றனர்.
மணிப்பூர் வன்முறைக்கு
எதிராக..
பின்னர் சில எம்பிக்களும் காவலர்களும் துணிச்சலுடன் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நேரத்தில் இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் இரு பெண்களும் சர்வாதிகாரம் ஒழிக என்று கோஷம் எழுப்பினார்கள்.
மணிப்பூர் வன்முறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பிய அவர்கள் “பாரத் மாதா கி ஜே” “வந்தே மாதரம்” என்பது போன்ற முழக்கங்களையும் எழுப்பினார்கள்.
உடனடியாக பெண் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் அவர்கள் கோஷங்களை எழுப்பியப்படியே சென்றதை பார்க்க முடிந்தது.
நாடாளுமன்றத்தில் நுழைந்த இரு இளைஞர்களையும் வெளியே கோஷம் எழுப்பிய இரு பெண்களையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அத்துமீறிய இளைஞர்களிடம் இருந்தது வண்ணப் புகைகளை வெளியேற்றும் சிலிண்டர் தானா அல்லது கண்ணீர் புகை போன்ற வெடிபொருட்களையும் அவர்கள் வைத்திருந்தார்களா என்பதை பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் துணை ராணுவ படையினர் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிரவாத தடுப்பு படையினர் என அனைத்து தரப்பினரும் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள். ஒருவரையும் அந்த உலகத்திற்குள் அவர்கள் அனுமதிக்கவில்லை.
இளைஞர்கள் இருவரும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது எப்படி? என்ற விசாரணையின்போது அவர்கள் பார்வையாளர்கள் என்ற பெயரில் “பாஸ்” பெற்று உள்ளே சென்று இருக்கிறார்கள். இதற்கான “பாஸ்” அவர்களுக்கு வழங்கியதே பாரதிய ஜனதாவை சேர்ந்த எம் பி ஆன பிரதாப் சிம்ஹா என்பவர் தான் என மற்றொரு எம்பி ஆன தானிஷ் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், காலிஸ்தான் தீவிரவாதிகள் சிலரும் நாடாளுமன்ற தாக்குதல் தினத்தன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வெளியானதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் அதுவும் நாடாளுமன்ற தாக்குதல் தினத்தன்று கையில் புகை சிலிண்டர்களுடன் இருவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என்று கருதப்படுகிறது. நாலு அடுக்கு பாதுகாப்பை கடந்து அவர்கள் எப்படி வெடி பொருட்களுடன் உள்ளே சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கோஷம் எழுப்பினாலும் பிடிபட்டவர்கள் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் தெரியவில்லை. இளைஞர்களில் ஒருவர் பெயர் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் என்றும் அவர் பொறியியல் பட்டதாரி என்றும் தெரியவந்துள்ளது. மற்றொருவர் பெயர் சர்மா. அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரா அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவரா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.
அதேபோல் பிடிபட்ட இரு இளம் பெண்களில் ஒருவர் பெயர் நீலம் (வயது 42 )மற்றொரு பெயர் அமோல் ஷிண்டே (வயது 25) என்று தெரியவந்துள்ளது.
சபாநாயகர் உத்தரவு
கேள்வி நேரம் முடிந்ததும் நடைபெற்ற இந்த அத்துமீறல் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் சபை கூறியதும் நடந்த சம்பவம் குறித்து சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
“நடந்த நிகழ்வுகள் குறித்து டெல்லி காவல்துறைக்கு பகிரப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் வீசியது சாதாரணமான மஞ்சள் நீரை புகை தான் என்று தெரிய வந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இருவரையும் காவல்துறை துறையினர் கைது செய்தனர்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அத்துமீறல் குறித்து சபையில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் ஓம் பிர்லா 4 மணி வரை மீண்டும் சபையை ஒத்தி வைத்தார்.
மோடி, ராகுல் காந்தி
அத்தமர்கள் நடந்த போது பிரதமர் மோடி உத்திரைய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வெளி மாநிலங்களுக்கு சென்றிருந்ததால் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பிற்பகல் ஒரு மணி அளவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சபைக்கு வந்த சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. இரண்டு அமைச்சர்கள் மட்டுமே சபையில் இருந்தனர்
