June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

வெள்ளாகுளம் மனு நீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

1 min read

1101 lakh welfare assistance in Vellakulam Manu Justice Day camp

14.12.2023

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட வெள்ளாகுளம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் 85 பயனாளிகளுக்கு ரூ.1101 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட வெள்ளாகுளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா முன்னிலையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது.

தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில், குறிப்பாக காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் மூலம் தங்கள் பகுதிக்கு வெந்து ஒவ்வொருவருக்கும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனை தேவையான மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. நம்மை காப்போம் 48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என பேசினார்.”

இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 16 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் ஆணையினையும், 2பேருக்கு விதவை உதவித்தொகைக்கான தொகைக்கான ஆணையினையும், 1 மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையினையும், 12 பயனாளிகளுக்கு ரூ.3,82,320/-மதிப்பிலான பயனாளிகளுக்கு வரன்முறைப்பட்டாக்களுக்கான ஆணையினையும், 8 5.6,38,000/- மதிப்பிலான பட்டா மாறுதலுக்கான ஆணையிணையும், 9 பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றத்திற்கான ஆணையிணையும், வேளாண்மைத்துறையின் மூலம் தார்பாய் விநியோகத் திட்டம் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1660/- மதிப்பிலான தார்பாய்களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டம் சார்பில் ரூ.56,600/- மதிப்பிலான அத்திக் கன்றுகள் மற்றும் மண்புழு உரப்படுக்கை களையும் தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்கள் அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.11,01220 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் வழங்கினார்.

முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலை துறை வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், உதவி இயக்குநர் (கலால்) இராஜமனோகரன் திருவேங்கடம் வருவாய் வட்டாட்சியர் பரமசிவன், வெள்ளாளகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி, மாவட்ட கவுன்சிலர் தேவி ராஜகோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) கனகம்மாள், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி மதிவதனா, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் முருகானந்தம். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.