தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் முப்பெரும் விழா
1 min read
Three Grand Ceremony at Tenkasi District Chief Government Hospital
14.12.2023
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில்
டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வு கருத்தரங்கம், தனியார் மருத்துவ மனைகளுக்கு மருத்துவ ஸ்தாபன ஒழுங்காற்று சட்ட பதிவு சான்று வழங்கும் விழா மற்றும் ஸ்கேன் பரிசோதனை நிலையத்திற்கான பதிவு சான்று வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் தலைமையில நடைபெற்றது
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் நடைபெற்ற டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வு கருத்தரங்கம், தனியார் மருத்துவ மனைகளுக்கு மருத்துவ ஸ்தாபன ஒழுங்காற்று சட்ட பதிவு சான்று வழங்கும் விழா மற்றும் ஸ்கேன் பரிசோதனை நிலையத்திற்கான பதிவு சான்று வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் தலைமை தாங்கினார், இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர் பிரேமலதா முன்னிலை வகித்தார்..
இந்த நிகழ்ச்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பற்றி மருத்துவர் பால கணேஷ் விரிவாக விரிவுரை ஆற்றினார். இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா டெங்கு நோய் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் அரசு காட்டிய வழிமுறைகளை அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனை களும் கடைப்பிடிக்க வேண்டும் என எடுத்துக் கூறினார்.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும், ஸ்கேன் ஸ்தாபனங்களும் அரசியல் பதிவு சான்றுகளை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுமார் 35 தனியார் மருத்துவமனைகளுக்கு பதிவுச் சான்றுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்க குற்றாலம் கிளை தலைவர் டாக்டர் சுலைமான் இந்திய குழந்தைகள் மருத்துவச் சங்க திருநெல்வேலி சாப்டர் தலைவர் டாக்டர் அப்துல் அஜீஸ் இருவரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் சுமார் 100 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
முடிவில் தென்காசி மாவட்ட தேசிய குழும திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் அறிவுடைய நம்பி அனைவருக்கும் நன்றி கூறினார்.