June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு ஹெலன் கெல்லர் விருது

1 min read

Helen Keller Award to Aayikudi Amarseva Sangam

15.12.2023

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் சேவா சங்கத்திற்கு ஹெலன் கெல்லர் விருது வழங்கப்பட்டுள்ளது

ஆய்க்குடி அமர் சேவா சங்கம் 1981-ல் துவங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் ஓட்டு மொத்த மறுவாழ்வு, கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்பு. தொழில், அதிகார பகிர்மானம் போன்ற பல்வேறு இனங்களிலும் அதிக ஈடுபாட்டோடு இயங்கி வருகிறது என்பதை நாம் அறிவோம். இச்சங்கம் செயல்படத் துவங்கியதிலிருந்து கடந்த 42 வருடங்களில் மத்திய, மாநிலப் பெரும் நிறுவனங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் மூலமும் பிரமிக்க வைக்கும் தன்மையில் பல நூறு விருதுகள் பெற்றுள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் டெல்லியில் இயங்கி வரும் டெல்லியில் செயல்பட்டு வரும் ஊனமுற்றோருக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான தேசிய மைய, நிறுவனம் மூலம் ஆய்க்குடி அமா சேவா சங்கத்திற்கு ஹெலன் கெல்லர் விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை அமர் சேவா சங்க வளர்ச்சிக்காக பல்வேறு இனங்களிலும் ஈடுபாடு கொண்டு முன்னேற்ற வழி நடத்தி நம்மை ஊக்குவித்து வரும் அமர் சேவா சங்க ரட்சகராக திகழும் .டாக்டர்.கார்த்திகேயன் முன்னாள் இந்திய சிபிஐ இயக்குநர் ஓய்வு பெற்ற தீபாக் லால் இருவரும் சேர்ந்து அமர் சேவா சங்கம் சார்பில் பெற்றுக்
கொண்டார்கள்.

ஹெலன் கெல்லர் விருது பெற்ற ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு அரசுத்துறை உயர்அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.