பாப்பாக்குடியில் வெள்ள நிவாரண உதவி
1 min read
Flood relief assistance in Papakudi
22.12.2023
தென்காசி மாவட்டம், பாப்பாக்குடி ஒன்றியத்தில் கன மழையால் வீடு சேதமடைந்த 15 பேரின் குடும்பத்தினருக்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நிவாரண பொருட்கள், மற்றும் நிதியுதவி வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்த நபர்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவியினை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழங்கி வருகிறார். அதன்படி பாப்பாக்குடி ஒன்றியப்பகுதிகளில் வீடு சேதமடைந்த 15 பேரின் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள், நிதியுதவி வழங்கப்பட்டது.
புதுப்பட்டி ஊராட்சி அம்பேத்கர் நகர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ஈஸ்வரி முருகன், புஷ்பம், பிரமிளாதேவி சிவசுப்பிரமணியன், சண்முகவடிவு அர்ஜுனன், அசோக்செல்வம், காசிநாதபுரம் செல்வம் கற்பகாம்பாள், பத்திரகாளி பிச்சையா, புதுபட்டி வேலாயுதம் சுந்தரி, மருதம்புத்தூர் ஊராட்சி அருந்ததியர் காலனி குருசாமி மல்லிகா, கிருஷ்ணன் முத்துலட்சுமி, வங்கித்தெரு ஜோசப் லட்சுமி, பாறையடித்தெரு ராமலட்சுமி, ஆறுவீட்டு தெரு பூமணி, மீனாட்சி புரம் தெரு பத்திரகாளி உள்ளிட்ட 15 பேரின் வீடுகளுக்கும் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் சென்று, வீடு சேதத்தை பார்வையிட்டார். திமுக சார்பில் நிதியுதவி மற்றும் அரிசி, உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முகராம் கவுன்சிலர், சங்கீதா சுதாகர், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யம்பெருமாள், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தங்கச்செல்வம், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, கிளை செயலாளர் குசலவன் ஆசிர்வாதம், முன்னாள் கிளைக்செயலாளர் மகேந்திரன், வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் சர்மிளா, காத்தப்பா, மருதமுத்தூர் கிளை செயலாளர் அருணாசலம், கல்யாணசுந்தரம், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுப்பையா,முராஜ், சிவா, இளைஞரணி அரவிந்த் திலக், நவீன் கிருஷ்ணா, அருணா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.